Friday 29 December 2017

           NIGHT FREE CALL TIMING REVISED
                     FROM 01-01-2018


There will be an increase of IDA by 2.6% 
from 
01-01-2018.
IDA from 1st January 2018
  will be 126.9%.

Msg  recd from Com PSR forwarded

Monday 25 December 2017

The Following officials of BSNL Coimbatore SSA retire on superannuation on 30th December 2017. We the members of AIBSNLPWA welcome the whole heartedly to the enchanting world of retirees.
The names are given below
S/Sri/Smt,
AIBSNL PWA , 
is the Organisation which
works tirelessly
for the welfare of all
 BSNL and DOT Pensioners
Without any bias of
Union, Cadre, Caste,
Religion, Creed or Language.
Dear Comrades
 Come and Join
our Pensioners Fold for
 HAPPIER TOMORROWS.

Thursday 21 December 2017

ஓய்வூதியர் தினம் ஊட்டி தொலை பேசிக மன மகிழ் மன்றத்தில்  16-12-2017 அன்று மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் தோழர் விஸ்வநாதன் தலைமை தாங்க , மாவட்ட செயலர் தோழர்.தாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ் மாநில துணைத்தலைவர் தோழர்.R . திருவேங்கடசாமி மற்றும் கோவை மாவட்ட செயலர் தோழர் B .அருணாசலம் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . 
அன்று உள்ளூரில் பேருந்து strike  இருந்தபோதும்கூட சிரமங்களை பொருட்படுத்தாமல் 52 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
மெடிக்கல் அலவன்ஸ் 19 தோழர்கள் பெற்று விட்டார்கள் இன்னமும் 36 தோழர்கள் பெற வேண்டும். அவர்களுக்கும் விரைவில் அலவன்ஸ் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடும்ப ஓய்வூதியர் திருமதி சுசீலா என்பவருக்கு குடும்ப ஓய்வூதியம் சுமார் 3 ஆண்டுகளாக வழங்கப்படாமலிருந்தது , நம் மாநில செயலர் தோழர் கே.முத்தியாலு மூலம் பெரு முயற்சிகள் எடுத்து அவருக்கு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டு  நிலுவை தொகையும் அளிக்கப்பட்டுள்ளது. தன் நன்றியினை நம் சங்கத்திற்கு காட்டும் விதமாக அவராகவே ரூ 10,000/- நன்கொடை அளித்துள்ளார்கள். அவருக்கு நம் நன்றி. கோவை மாவட்டம்  ஓய்வூதியர் டைரக்டரி வெளியிட உள்ளது. எனவே ஊட்டி தோழர்களும் தங்கள் விவரங்களை கொடுத்தால் அவர்கள் பெயர் மற்ற விபரங்களையும் இணைத்து வெளியிட கோவை மாவட்ட சங்கம் முடிவெடுத்துள்ளது. சங்க அலுவல்களை நடத்துவதற்கு தொலைபேசியகத்தில் ஒரு அறை கேட்டுள்ளோம். PGM அவர்களும் தருவதாக கூறியுள்ளார்கள்.
2000க்கு முன்பாக ஒய்வு பெற்றுள்ள DOT தோழர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்துள்ள உயர்வு கிடைக்க சுமார் 3 மூத்த தோழர்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெருவாரியான தோழர்கள் 78.2 நிலுவைத் தொகை பெற்று விட்டார்கள். மாவட்ட அளவில் நம் சங்கத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் நடத்தினால் , ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை எடுத்துரைக்க வசதியாக இருக்கும் என்று விரும்புகிறார்கள். தனிப்பட்ட முறையில் AO விடம் கூட குறைகளை கூற முடியவில்லை. மாநில செயலருக்கு இது விஷயமாக கடிதம் எழுத உள்ளோம். 
DOT ஓய்வூதியர்க்கு கணக்கிடப்பட்டுள்ள ஓய்வூதியத்தில் தவறு இருப்பதை தோழர் திருவேங்கட சாமி கண்டு பிடித்து தபால் ஆபிஸின்  கணக்கீடு தவறு என்று கூறியுள்ளார். தவறினைக்களைய தபால் அதிகாரிகளை சந்திக்க வேண்டும்.
தோழர்கள் RT மற்றும் அருணாசலம் தங்கள் உரையில் 78.2 பெற்ற சாதனை, 60:40 தகர்த்த சாதனை, பணியில் இருப்போருக்கு இல்லாத மருத்துவ அலவன்ஸ் -ஐ ஓய்வூதியர்களுக்கு பெற்று தந்த சாமர்த்தியம், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நமக்கும் விஸ்தரிக்க நாம் எடுத்து வரும் முயற்சிகள் மற்றும் 78.2 IDA அடிப்படையில் 01-01-2007 முதல் நிலுவை பெறுதல் , gratuity , leave encashment , போன்றவற்றை நாம் பெற நம் சங்கம் பெரு முயற்ச்சி எடுத்து வருகிறது. என்று தெளிவாக எடுத்துரைத்து பேசினார்கள். திரு நகரா அவர்கள் ஓய்வூதிய அனாமலி குறித்து தொடர்ந்த வழக்கில் 17-12-1982 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டு ஓய்வூதியர்கள் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது. நமக்கும் அவ்வப்போது உயரும் விலைவாசிக்கேற்ப பஞ்சப்படி வழங்கினால்தான் கண்ணியமான வாழ்க்கையினை நடத்த முடியும் என்று தீர்ப்பு அளித்ததின் பேரில் நாம் DA பெற்று வருகிறோம். உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த பாடுபட வேண்டுகோள் விடுத்தார்கள். 
மாவட்ட பொருளாளர் நன்றி உரைக்குப்பின் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.






















To the Kind Information of Circle Office Bearers, District Secretaries and District Office Bearers, Please pass on the message conveyed by Com.DG to those who are affected by Extra Increment Case.
“Regarding extra increment case PCCA, TN sought clarification from DoT on 20/11/17. He wants DoT approval for recovering the pension already granted for 68.8 from 1/1/2007. With that intention in mind, he has withheld arrears from 10/6/2013 to 31/12/2016 and ordered for granting 78.2 without Extra increment from 1/1/2017. Our CHQ has written a letter to Member (s) objecting the stand of PCCA, TN. Further, we are going to file a fresh case in CAT, Chennai. Our members are requested to wait for sometime.”
Above message from com. DG.


Thursday 14 December 2017

Today
Com. K.M.Shanmugham
joined as a
LIFE MEMBER
in
AIBSNLPWA
Coimbatore District
Branch.
We
Welcome him
whole Heartedly.


Circle secretary sought an appointment with PCCA to discuss certain important issues. He gave time at 1630 hours today (13th Dec) . Coms. DG, Ramarao & Muthiyalu met PCCA today and discussed.
Salient features of the discussion are furnished below.
1) There are about 12,000 CDA pensioners and more attention is being given to revise their pension and it will be completed within a month.
2) So, after a month, notification shall be issued for holding the next pension adalat. It may be held in March/April 17 at Chennai (centralised).
3) We brought to his notice that monthly meeting with Jt.CCA is not yielding desired results. Hence many issues have piled up. He is not assertive. PCCA understood our dissatisfaction and told that he would guide him. He said that he is facing shortage of officers.
4) Regarding extra increment case, he has sought clarification from DoT. In the meantime, he has taken a decision to grant 78.2 benefit without Extra increment to the pending cases because there will be delay in getting the clarification from DoT.
V.Ramarao,
President,
AIBSNLPWA
TN Circle,

Tuesday 12 December 2017


கோவை தொலை பேசி வளாகத்தில், 1.1.2017 முதல் (10 ஆண்டுக்கு ஒரு முறை ) ஊதிய மாற்ற ம் கோரிக்கை மற்றும் பி எஸ் எல் என் க்கு சொந்தாமான 70,000 அலை பேசி கோபுரங்களை தனியாக பிரித்து தனி நிறுவனம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து பணியாளர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் இரண்டு நாள் வேலை நிறுத்த,கூட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது கோவை AIBSNLPWA (ஓய்வூதியர் சங்கம்)சார்பில் நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாடடம் .நிகழ்வுகள்.
நன்றி திரு UTK 
Demonstration in Udumalpet
    Courtesy aartee




Monday 11 December 2017

Welcome Comrades. 
We the members and office bearers of 
Coimbatore District Branch of AIBSNLPWA welcome 
Com.Kadirvel.
Com.Sesurajan,
Com.Raghavendran,
Com.Renganayaki &
Com.K.G.Ramakrishnan
 as
 Life Members.

Com.Sesurajan

Com.Kadirvel
Com.Raghavendran
Son of Com.Ranganayaki
Com.K.G.ramakrishnan
Smt. Ranganayaki, Family Pensioner
 has enrolled as new life member 
of our association today.
 She had sent her application
 thro. her son.
We are now 672 now.
Our Target is 1000,
We are marching ahead





Pensioner's day Celebration was conducted by our Coimbatore  district branch today at Divoyadaya hall in a grand  manner under the Presidentship of our president G Gurusamy. Our Dt. Secreatary inaugurated.  Initially the children of the troupe of our member Ravichandran performed Parai isai , which was highly appreciated by the audience. He is carrying out naural farming and training students in our ancient Parai Isai, Silambam in his farm near Aliyar Nagar. Later the Circle office bearers of our Division Comrades C.Palanisamy, R.Thiruvenkatasamy, Sivakama sundari, our web master N.Mohan addressed the gathering. Our Circle Secretary, Com.Muthialu in his lengthy speech highlited the importance of  pensioner's day, our achivements and tasks before us, settled issues etc which has enlightend the listners. Com Das dt. secy. Coonoor SSA and com A Roberts Of  NFTE also addressed. The jam packed gathering of 290 members  ( Including more than 55 lady comrades and 12 comrades from adjoining Conoor SSA ) attended the meeting. 4 new life members have erolled in our association  in the meeting itself. The meeting concluded with delicious  lunch. 
கோவை தோழர் U .திருமலை குமார் அவர்கள் நம் மாநில செயலர் உரையாற்றும் போதே அவர் பேருரையினை உடனுக்குடன் தனது ஸ்மார்ட் செல்போனில் தமிழில் டைப் செய்து அவ்வப்போதே வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார். அவரின் திறமை பெரிதும் பாராட்டுதற்குரியது. அவர் தொகுப்பினை இங்கே பதிவு செய்துள்ளோம்.
வாழ்க அன்னாரின் திறமை.வளர்க நம் சங்கத்தின் மேல் அவர் கொண்டுள்ள பற்று.
தோழர் முத்தியாலுவின் சிறப்புரை
1.1979 ல் திரு நாக் ரா அவர்களின் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு கொடுத்த கெளவரவமான ஓய் வூதியம் (பணியில் இருந்த அதே ஸ்டேட்டஸ் உடன்) அனைவருக்கும் பாரபட்சம் இல்லமல்.அதற்கு அவர்க்கு  நன்றி பாரட்டி இன்று அது பென்ஷனர் தினமாய் கொண்டா டப்படுகிறது.
2.பி எஸ் என் எல் புதிய ஊதிய மாற்ற கோரிக்கை நடைபெறும் 12,13/12/2017 வேலை நிறுத்த போராடடம் ,ஆதரவு ஆர்ப்பாட்டம்
3)7 வது மத்திய அரசு சம்ப்ளக் கமிட்டி சிபாரி சின் அடிப்படையில் ஓய் வூதிய மாற்றம் கோரி நிதி மன்ற வழக்கு .சதாகமான சூழல் .டி டி அறிக்கை வர வேண்டிய நிலை. இது அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்பிக்கையும் தந்தார் தன் உரையில்.
4.) 78.2 % டி இணைப்பு மற்றும் 100 சதம் அரசு பென்ஷன் ,60/40 நிபந்தனை நீக்கம்,இதற்கு சங்கம் செய்திடட முயற்சிகள்,அமைச்சர் ஆனந்த் குமாரின் பேருதவி. இன்னும் ஆணை வந்தும் இன்னும் கிடைக்காத தோழர்கள் முக்கிய பொது மேலாளரை அணுகி பணப்பலன் கிடைத்திட ஆவன செய்திட அறிவுறுத்தினர்.பிரச்சனைகளை
 தீர்ப்பதும் மிக முக்கியம் என சூழுரைத் தார்.
5. அரசு நிதியிலிருந்து பென்ஷன் வாங்கி கொடுத்து பேருதவி புரிந்த தோழர் குப்தா ,தோழர் வள்ளிநாயகம் ஆகியோரது ஆளுமையை சிறப்பித்தது நன்றி பரட்டுனார்.
6. மருத்துவ உதவி ,பில்கள் பேமெண்ட் தாமதம் ,ஓய் வூ தியருக்கு முன் சலுகை இதற்கெல்லம் தல மாட்ட சங்கம் முயற்சிகள் செய்வது அவசியம் என வலியுறுத்தினார்
7.)பென்ஷன் மாற் றத்திற்கும் ,பி எஸ் என் எல் சம்ப்ள மாற் றத்திற்கும் சம்பந்த மில்லை.அதற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ் நாடு மின் சார நிர்வாக பணியாளர் மற்றும் சில மத்திய பொதுத்துறையில் உள்ளவை களை உதாரணமாய் தந்தார். 7 வது சம்ப்ளக் குழுவில் உள்ள பரிந்துரை அடிப்படையில் பென்ஷன் மாற்றம் தான் அனைவருக்கும் லாபகரமான ஒன்று என புள்ளி விபரத்தோடு முழங்கினார்.இது விஷயமாக அமைச்ச்ர் மற்றும் டி ஓடி ,பி எஸ் என் எல் உயர் அதிகாரிகளிடம் நமது கோரிக்கையின் நியாயத்தை நமது சங்கம் மெமரண்டமாய் கொடுத்துள்ள தகவலை விரிவாய் விளக்கினார்.
8).பென்ஷன் அனாமலி,எக்ஸ்டிரா இன்கிரிமெண்ட் ஆகிய பிரச்சனையின் அனைத்து விபரங்களையும் தெளிவாக்கினார்.ஓய் வூ தியருக்கு பண மிழ்ப்பு இல்லாமல் இருக்கும் வகையில் நிதி மன்ற தடை பற்றி விவரித்தார்.இ்தில் இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி என்கிறார்.
9)2000ல் ஓய்வு பெற்றவருக்கு சாதகமான ஓய் வூதியம் ( 50 %last pay drawn /10 months avg -advantage).
10)எதிர் கால கோரிக்கைகள் வெற்றி பெற நிதி மன்ற செலவுக்கு என வங்கியில் ஒரு கோடி வரை நிர்ந்திர வைய்ப்பு தொகை .நிதி ஆதாரம் இன்னும் மேம்படவும் தோழர்கள் தாராளமாய் டொனேஷன் வழங்கிட கோரினார்.
11)ஓய் வூதியருக்கு மருத்து உதவிக்கு சங்கம் எடுத்த நடவடிக்கை கள் .அதற்கு உதவியவர்களை நினைவு கூர்ந்தார். 6 மாதம் வரைகிடைத்துள்ளது.இது தொடர வேண்டும் என்றார்.வெண்டார்  கோடு கிரியேட் பண்ண வேண்டியுள்ளதால் இதில் பேமெண்ட் தமாத்திற்கு காரணம்.கணக்கு அதிகாரிகள் ,பணியாளர்கள் பற் றா க்குறை ஒரு காரணம்.
12. வி ஆர் எஸ் பெற்றோருக்கு ஓய்வு தியம் கிடைப்பதில் அதீத தாமதம் சரி செய்திட சங்கம் எடுக்கும் முயற்சிகள் பலளிக்கும் என்று நம்பிக்கை தந்தார்.
பொது துறை பாது காப்பு,பி எஸ் என் எல் பாதுகாப்பு,அரசின் தனியாருக்கு தரும் சலுகை ,லாப ஈட்டும் நிலையில் உள்ள நிலையில் டவர் கம்பெனி உதயம்,பென்ஷன் இனி வங்கிக்கு பதில் டி டி யின் அலுவலகம் மூலம் வரும் ஏப்ரல் முதல் வழங்கும் முறை வர உள்ளது. தொகுப்புரையில்,சங்க வளர்ச்சியில் எடுக்க வேண்டிய செயல்கள்,78.2 இணைப்பு,பென்ஷன் ரிவிஷன்,மருத்துவ உதவி,அனாமலி,2000 ஓய்வு பெற்றவர் பென்ஷன் மாற் ம், அனைத்தையும் மீண்டும் சுருக்கமாய் அருமையாய் பரப்புரை தந்து சிறப்பித்தார்.
UTK. 
To see the photos of the meeting click here.

CLICK Here to see all Photos

Thursday 7 December 2017

அன்புள்ள தோழர்களே  / தோழியர்களே,
அனைவருக்கும் வணக்கம்.
2000க்கு முன்பாக ஒய்வு பெற்ற DOT தோழர்களின் ஓய்வூதியம் மாற்றத்திற்காக கடுமையான சுழலிலும் கூட சுமார் 60 மூத்த தோழர்களுக்கு ஓய்வூதியம் கணக்கீடு செய்யப்பட்டு DOT அலுவலகத்திலிருந்து Revised ஆர்டர் போடப்பட்டு ஓய்வூதியர்களுக்கு அவர்களின் கணக்கில் நிலுவைத் தொகை வருகிற மாதத்தில் பற்று வைக்கப்பட்டு, பென்ஷனிலும் கிடைக்க உத்தரவு வந்துள்ளது.
மறைந்த மூத்த தோழர் பாலசுப்ரமணியம் , தோழர் E.K. சுப்ரமணியம், தோழியர் K.S. சுப்புலக்ஷ்மி போன்ற மூத்தவர்களுக்கு உத்தரவு வரப்பெற்று வங்கியில் பணம் போடப்பட்டுள்ளது. இவர்களைத்தவிர சுமார் 40 மூத்த தோழர்களுக்கு போடப்பட்ட Revised ஆர்டர் copy AO /CBT  அவரவர்களுக்கு உரிய தனிப்பட்ட Copy ஓய்வூதியர்களுக்கும், வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மீதம் உள்ள அனைத்து eligible தோழர்களுக்கும் , application கொடுத்துள்ள   தோழர்களுக்கும் படிப்படியாக வந்து சேரும் . கணக்கு அதிகாரி திருமதி தேன்மொழி, சிவகாமசுந்தரி,மற்றும் திரு.சசிதரன் AAO போன்றவர்களின் பெரு முயற்ச்சியால் 6வது சம்பளக்கமிஷன் Pay revision  ஆர்டர் தகவல் பெறப்பட்டு கோவையில் உள்ள மூத்த தோழர்களின்  revision ஐ DOT க்கு அனுப்பியுள்ளனர். Dot cell -ம் இந்த Pay revision ஆர்டர் ஐ Sanction செய்து இருப்பது மன நிறைவைத் தருகிறது.
தோழர்களே நம்முடன் பணியாற்றி  DOT யிலிருந்து ஒய்வு பெற்ற தோழர்களுக்கு Pension revision வந்திருப்பது நம்சங்கத்தை நன்றியுடன் திரும்பிப் பார்க்க வைக்கிறது.நமது சங்கத்தின் இந்த சாதனை சங்க வேறுபாடு இல்லாமல் அனைத்து மூத்த தோழர்களையும் நம்முடன் இணைக்கும் என்பது உறுதி. இந்த செய்தியினைக் கேள்விப்பட்ட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும்  மூத்த தோழர் கோபாலகிருஷ்ணன் SSS (O ) (ஒய்வு) அவர்களை மாவட்ட செயலர் சந்தித்த போது , நம் சங்க உறுப்பினராக விருப்பம் தெரிவித்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தரும்படி வேண்டியுள்ளார். நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திற்கு கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.விடுபட்ட தோழர்கள் , விண்ணப்பம் கொடுக்காதவர்கள் ஆகியோர் நம்மை அணுகினால் சங்க வேறுபாடின்றி உதவ காத்திருக்கிறோம்.
09-12-17 ல் நடைபெறவுள்ள பென்ஷனர் தின கொண்டாட்ட நிழச்சியில் குன்னுர் தோழர்கள் , உறுப்பினர் அல்லாத அதிகாரிகள் , pension புத்தகம் வராத தோழர் சோமு ,ஏசுராஜன் ,ரமேஷ் தோழியர் மாதுரி போன்றவர்கள் நம் சங்க உறுப்பினர்களாக இணைய உள்ளனர். இந்த முயற்ச்சியில் ஈடுபட்ட நம் அனைத்து தோழர்களுக்கும் நன்றி .
மேலும் 09-12-17 பென்ஷனர் தின கொண்டாட்ட தினத்தை தமிழரின் பழமையான , பாரம்பரிய தொல் இசை நிகழ்ச்சியுடன் துவங்க இருக்கிறோம். சுவையான உணவு, இதமான உபசரிப்பு,கனிவான தகவல் பரிமாற்றம், புதியவர்களின் அறிமுகம் , ஓய்வூதியர்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளுதல், ஆலகாலப்பட்ட மாநில செயலர் தோழர் முத்தியாலு பேருரை போன்ற இனிய நிகழ்ச்சிகளுடன் நன்றாக நடைபெற AIBSNLPWA என்ற மஹா தேரை வடம் பிடிக்க வாருங்கள் வாருங்கள் என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
நிகழ்ச்சிகள் சரியாக காலை 10-01 மணிக்கு துவங்கும். தோழர்கள் காலம் தாழ்த்தாமல் சரியான நேரத்திற்கு வருகை புரிய வேண்டுகிறோம்.
பணி ஒய்வு பெற்றுள்ள நாம் ஓய்வின்றி உழைத்து ஒளிமயமான எதிர்காலத்தை ஈன்றெடுப்போம் .